சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்

82பார்த்தது
சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்
சிலி நாட்டில் இன்று (ஜுலை 19) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஆட்டோஃபாகஸ்டா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக இருந்ததாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 128 கி.மீட்டர் தொலைவில் இருந்தது தெரியவந்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இதன் முழு விவரங்கள் இன்னும் வரவில்லை.

தொடர்புடைய செய்தி