தென்காசியில் சோகம்: உயிரிழந்த தச்சு தொழிலாளி

4246பார்த்தது
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் உத்தண்ட சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் அய்யனார் (37). அய்யனார் தச்சு தொழில் செய்து வந்தார். இந்நிலையில் அய்யனார் கரிவலம்வந்தநல்லூரில் உள்ள ஒரு வீட்டில் தச்சு தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே தச்சு தொழிலாளி அய்யனார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி இறந்த தச்சு தொழிலாளி அய்யனாருக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி