வைகோலுக்கு தீ வைத்தவர் கைது

61பார்த்தது
வைகோலுக்கு தீ வைத்தவர் கைது
தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதநாச்சியார்புரம் பகுதியை சேர்ந்த சுப்பையா(65). விவசாயி. இவரது விவசாய நிலத்திற்கு பக்கத்து நிலமான மாடசாமி என்பவரின் நிலத்திலும் இவர் வருடம் 2000 ரூபாய் கொடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மாடசாமி தனது நிலத்தில் இனி விவசாயம் செய்யக்கூடாது என சுப்பையாவிடம் கூறியுள்ளார்,

இதற்கு சுப்பையா தான் விளைவைத்த நெற்பயிர் களை அறுவடை செய்த
பின்பு இனி உங்கள் இடத்தில் விவசாயம் செய்ய மாட்டேன் என
கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாடசாமி மற்றும் அவருடன் வந்த வெள்ளத்துரை ஆகியோர் இணைந்து சுப்பையா வைத்திருந்த ரூபாய் 45 ஆயிரம் மதிப்பிலான வைகோல் கட்டுகளை தீ வைத்து எரித்துள்ளனர்.

இது குறித்து சுப்பையா புளியங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் சஞ்சய் காந்தி விசாரணை மேற்கொண்டு,

மருதநாட்சியார்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் மாடசாமி (40) மற்றும் சுப்பிரமணியபுரம் காந்தி நகரை சேர்ந்த வெள்ளபாண்டி என்பவரின் மகன் வெள்ளத்துரை (39) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து,

மாடசாமியை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி