'பாரத் மாதா கி ஜே' மற்றும் 'ஜெய்ஹிந்த்' ஆகிய முழக்கங்களை முதன்முதலில் எழுப்பியது இரு இஸ்லாமியர்கள் தான் எனவே, சங்பரிவார் அமைப்பு இந்த முழக்கங்களைக் கைவிடுமா? என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,'பாரத் மாதா கி ஜே' முழக்கத்தை முதலில் எழுப்பியது அஜிமுல்லா கான் என்றும், 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை முதலில் எழுப்பியது அபித் ஹசன் என்றும் தெரிவித்துள்ளார்.