உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த சுஷ்மா என்ற பெண் முழு அலங்காரத்துடன் இன்ஸ்டாகிராம் ரீலிஸ் எடுக்க தயாரானார். அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதை அவர் உணர்ந்திருக்க வாய்ப்புகள் இல்லை. தனது உடையை சரி செய்துகொண்டு மெல்ல நடந்த வரும்போது, அவர் எதிரே பைக்கில் வந்த நபர் சுஷ்மா கழுத்தில் இருந்த செயினை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் சுஷ்மா கண்மூடி திறப்பதற்குள் அங்கு நடந்ததை நினைத்து ஏய் ஏய் என சத்தம் கொடுத்தபடியே திகைத்து நின்றார். அதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.