தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கள் செய்து வருகின்றனர். மேலும் சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் வித்தியாசமான முறையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து கவனம் ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் ராமதாஸ் என்பவர் புதுச்சேரியில் பல கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இது தொடர்பாக பல தரப்பிலும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கைகள் இல்லை. இந்நிலையில் 2 ஆண்டுகளாக சேர்த்து வைத்த 12,500 பத்து ரூபாய் நாணயங்களை கொடுத்து இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.