தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

70பார்த்தது
தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 23, 000/- மதிப்பிலான திறன்பேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் வழங்கினார்.

கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 340 மனுக்கள் பெறப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, மாவட்ட கோட்டாட்சியர்கள் லாவண்யா (தென்காசி), கவிதா (சங்கரன் கோவில்), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம். மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெய பிரகாஷ், உதவி ஆணையர் (கலால்) ராமச்சந்திரன், செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி