திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறுபடை வீடு திட்டத்தின் கீழ் நேற்று (ஜுன் 10) பக்தர்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு அழைத்து வரப்பட்டனர். பக்தர்களை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் மலை கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கான உணவு மற்றும் தங்கும் விடுதி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து கொடுத்தது.