நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், வெண்ணந்தூர் அடுத்த, அலவாய்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெயபால். இவர் நேற்று (ஏப்ரல் 7) பைக்கில் சென்று கொண்டிருந்தபோது போது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார். அப்போது அருகில் வந்து கொண்டிருந்த பேருந்தின் பின் சக்கரங்களில் சிக்கி, உடல் நசுங்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்த CCTV காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.