டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

57பார்த்தது
டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்னணு பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த மாநாட்டில், டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன அதிகாரியிடம் ஒப்பந்த கோப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் பல அயல் நாட்டு நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி