தமிழக யூடியூப் பிரபலத்துக்கு பாலியல் தொல்லை

10993பார்த்தது
தமிழக யூடியூப் பிரபலத்துக்கு பாலியல் தொல்லை
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், 'யூடியூப்பில்' பிரபலமாக உள்ளார். அவர், ஓட்டல், ஜவுளி கடைகளில் உணவு மற்றும் பொருட்கள் குறித்து வீடியோ எடுத்து 'யூடியூப்பில்' பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சென்னைக்கு வந்த அவர், மெட்ரோ ரெயிலில் மீனம்பாக்கம் விமான நிலையம் செல்வதற்காக சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள லிப்டில் ஏறியுள்ளார். அப்போது அவருடன் ஏறிய வாலிபர், தனியாக இருந்த அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அசோக் குமார் (வயது 20) என்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி