இந்தியா கூட்டணி ஆட்சியமைந்ததும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஜூலை 5ஆம் தேதி ரூ.8,500 வரவு வைக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், INDIA கூட்டணி அரசமைந்ததும் ஏழைக் குடும்பங்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கப்படும் எனவும் அதில் பெண் பெயர் தேர்வு செய்யப்பட்டு, வங்கிக் கணக்கில் ஜூலை - டிசம்பர் வரை பணம் வரவு வைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.