மாநிலங்களவை உறுப்பினரானார் சுதா மூர்த்தி

73பார்த்தது
மாநிலங்களவை உறுப்பினரானார் சுதா மூர்த்தி
மகளிர் தினமான கடந்த மார்ச் 8 அன்று சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், சுதா மூர்த்திக்கு மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணை தலைவருமான ஜகதீப் தன்கர் இன்று மார்ச் 14 பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், சுதா மூர்த்தியின் கணவரும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனருமான நாராயண் மூர்த்தியும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி