நெல்லை மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம்!

56பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் திடீர் நிலநடுக்கம்!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களிலும், அதேபோல் தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, உள்ளிட்ட இடங்களிலும் திடீரென நில அதிர்வை உணர்ந்ததால் பொதுமக்கள் பீதியில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். வீடுகள் பயங்கர சப்தத்துடன் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். சரியாக 12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி