பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நேர மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறார்கள் என்பது முதல் இரவு தூங்குவது வரை நேர அடிப்படையில் கவனம் செலுத்தி படிப்பது சிறந்த முறையாகும். பள்ளிக்குச் செல்வது, உணவு, படிக்கும் நேரம் என்று மட்டுமில்லாமல் உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குவது அவசியம். எல்லா விஷயங்களிலும் நேரத்தை பின்பற்றுவது சிறப்பான பலனை கொடுக்கும்.