தடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை!

76பார்த்தது
தடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை!
தென் மாவட்டங்களில் கனமழைக் காலத்திலும் முன்னெச்சரிக்கையாக ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி போதிய அளவு ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாகப் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி