ஹைதராபாத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி

81பார்த்தது
ஹைதராபாத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது தென் இந்திய பயணத்தின் ஒரு பகுதியாக இன்று தெலங்கானாவின் ஹைதராபாத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) மாலை 4.55 மணிக்கு துண்டிகல் விமானப்படை விமான நிலையத்தில் அவரின் சிறப்பு விமானம் தரையிறங்குகிறது. 5 நாட்கள் ஹைதராபாத்தில் தங்கவிருக்கும் அவர் குளிர்காலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணம் முடிந்து 23ஆம் தேதி அவர் புறப்படுவார் என கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி