தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் வேகமான நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்

54பார்த்தது
தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் வேகமான நடவடிக்கை - மு.க.ஸ்டாலின்
நெல்லை மார்க்சிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரத்தில் தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் வேகமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். நெல்லையில் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விளக்கமளித்துள்ள முதல்வர், "இவ்விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு சட்டம் கொண்டு வருவதைவிட தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் அடிப்படையில் தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது சரியானது என்று இந்த அரசு கருதுகின்றது" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி