குஜராத் மாநிலம் சூரத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம் ஆத்மி கவுன்சிலர் ஜிதேந்திர கச்சாடியாவின் 17 வயது மகன் தீயில் சிக்கி உயிரிழந்தார். உயிரிழந்தவர் 12ஆம் வகுப்பு படிக்கும் பிரின்ஸ் கச்சாடியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றும் பலனில்லை. வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர்.