கள்ளக்குறிச்சியை சேர்ந்த 24 வயது பெண் இரண்டு குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது +1 மாணவன் அந்த பெண் குளிப்பதை செல்போனில் படமெடுத்து வைத்து தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளார். சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனையடுத்து தனது கணவருக்கும், போலீசாருக்கும் அப்பெண் தகவல் அளித்துள்ளார். போலீசார் மாணவனை தேடி வருகின்றனர்.