சிவகாசி வெடி விபத்து - 4 பேர் காயம்

58பார்த்தது
சிவகாசி வெடி விபத்து - 4 பேர் காயம்
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலை குடோனில் இன்று வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். மேலும், சிலர் குடோனுக்குள் சிக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி