மரக்கடை வீதியில் சரக்கு வாகன ஓட்டுநர் கொலை போலீசார் விசாரணை

80பார்த்தது
சிவகங்கை அருகே பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ராஜபாண்டி(42). சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வந்த இவர் தனது குடும்பத்துடன் சிவகங்கை சுண்ணாம்புகாளவாசல் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சிவகங்கையில் மக்கள் நடமாட்டமும், பேருந்து போக்குவரத்தும் அதிகமாக நடைபெறும் மரக்கடை வீதியில் உள்ள தனியார் மதுக்கூடத்தின் வாயிலருகே வந்த இவரை ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் துரத்தியது. உயிர் தப்பிப்பதற்காக அருகிலுள்ள மரக்கடைக்குள் நுழைந்த ராஜபாண்டியை ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துணை கண்காணிப்பாளர் சிபிசாய் சௌந்தர்யன் தலைமையில் நகர்காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், உதவி ஆய்வாளர் சண்முகப்பிரியா மற்றும் போலீஸார் ராஜபாண்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இந்த நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மரக்கடை வீதி பகுதியில் இன்று இரவு நடந்த கொலை சம்பவம் பொதுமக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி