சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் மீது வழக்கு

80பார்த்தது
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் மீது வழக்கு
சிவகங்கை பேருந்து நிலையப் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சிவகங்கை நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் சிவகங்கை நகர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் காவலர்கள்
பேருந்து நிலையப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அந்த சோதனையில் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் முனியசாமி வயது (65) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது அதன் அடிப்படையில் அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து இன்று மாலை சுமார் ஐந்து முப்பது மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி