தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷே விழா

53பார்த்தது
சிவகங்கை மாவட்டம் எஸ் எஸ் கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ராஜ நாக அம்மன் திருக்கோவிலில் ஸ்ரீ தஷிணாமூர்த்தி சுவாமிக்கு புதிதாக சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது இக்கோவிலில் வீணையுடன் அருள்பாலிக்கும் தக்ஷிணாமூர்த்தி சுவாமி சிலை பிரதிஷ்டை செய்து தனி விமானத்துடன் கோவில் கட்டப்பட்டது திருப்பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து கும்பாபிஷேகம் நடந்தன கணபதி ஹோமத்துடன் நான்கு கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது கோ பூஜைகள் நவக்கிரக ஹோமங்கள் சுவாமியின் மூல மந்திரங்கள் கூறி யாக குண்டத்தில் 108 மூலிகை பொருட்கள் சமர்ப்பித்து பூர்ணாகுதி அளிக்கப்பட்டன பின்னர் மங்கள வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை சுற்றி வலம் வந்து மூலவர் விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு மூலவர் தக்ஷிணாமூர்த்தி சுவாமிக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்து கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராஜநாக அம்மன் மற்றும் தக்ஷிணாமூர்த்தி சுவாமியை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி