திறன் சாரா பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு

70பார்த்தது
திறன் சாரா பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு
மாநில தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, தமிழகத்தில் வாக்குப்பதிவு வருகின்ற 19. 04. 2024 அன்று நடைபெறவுள்ளதால், சிவகங்கை மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான 18. 04. 2024-ம் தேதி வருகை புரிந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் திறன் சாரா பணியாளர்களுக்கு (Unskilled Labours) தங்கள் வாக்கினை செலுத்திட ஏதுவாக 19. 04. 2024 அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி