இந்தியாவிற்கு இரு பேராபத்துகள் - ப. சிதம்பரம் பேட்டி.

63பார்த்தது
இந்தியாவிற்கு இரு பேராபத்துகள் - ப. சிதம்பரம் பேட்டி.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசுகையில்:
ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் ஆகிய இரண்டும்
ஜனநாயகம், சகிப்புத்தன்மை,
சக வாழ்வு, மதசார்பின்மை போன்றவற்றை கேள்விக்குறியாக்கும் இரு பேராபத்துக்கள்
என்றும்,
மக்களை பிளவுபடுத்தும் இரண்டு சட்டங்களும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியில்
இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் அரைத்த மாவையே திரும்பவும் அரைத்ததுள்ளார்கள். அதில் இட்லியும் சுட முடியாது தோசையும் சுட முடியாது என்று கிண்டல் அடித்த ப. சிதம்பரம், தலையாயப் பிரச்சனையான விலைவாசியை கட்டுப்படுத்துதல், வேலை வாய்ப்பை ஏற்படுத்துதல் போன்ற வாக்குறுதிகளை பாரதிய ஜனதா கொடுக்காது என்றும் உறுதியாக கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி