மது அருந்தியபோது நண்பரை கொலை செய்த 4 பேர் கைது

1590பார்த்தது
மது அருந்தியபோது நண்பரை கொலை செய்த 4 பேர் கைது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்புகாவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தேவகோட்டை தாலுகா பூங்குடியேந்தல் அருகே கடந்த 21. 3. 2024 -ல் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் பொழுது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தேவகோட்டை ஜீவா நகர் சேதுராஜ் மகன் ராதாகிருஷ்ணன்(38) என்பவரை வெட்டிக் கொலை செய்து தேரளப்பூர் முத்துநாட்டு கண்மாயில் புதைத்துவிட்டு சென்றனர்.

தகவலறிந்த காவல் துறையினர் 14. 5. 2024 -ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) ராதாகிருஷ்ணன் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து, தோண்டி எடுக்கப்பட்ட உடலை அரசு மருத்துவர் செந்தில்குமாரை வைத்து உடற்கூராய்வு செய்தனர். இதையடுத்து கொலையில் தொடர்புடைய செல்வகுமார்(34), ராஜா(31), கரண்(25), கார்த்திக்பாண்டி(23) ஆகிய 4 பேரை தேவகோட்டை தாலுகா போலீஸார் கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டோங்கரே பிரவீன் உமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி