காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உணவகங்களில் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் கொண்டு உணவு தயாரிப்பதாக பெங்களூரு உணவக சங்கம் தெரிவித்துள்ளது. அதேபோல் சாலட்டில் பயன்படுத்தப்படும் வெங்காயத்திற்கு பதிலாக வெள்ளரிக்காயை சேர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். காய்கறிகளின் விலை கூடினாலும் உணவு விலையை அதிகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். அசைவ உணவுகளை ஒப்பிடுகையில் சைவ உணவு சமைக்க அதிக செலவாவதாக கூறப்பட்டுள்ளது.