பாலியல் தொழில் செய்தவர் கைது

53பார்த்தது
பாலியல் தொழில் செய்தவர் கைது
சென்னை வளசரவாக்கம், ராமமூர்த்தி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அங்கு, கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த திலீப் (24) என்பவர் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. நேற்று (அக்., 05) அவரை கைது செய்த போலீசார், அவரிடம் சிக்கியிருந்த இரண்டு பெண்களை மீட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி