பாலியல் பேரம் - நிர்மலா தேவி வழக்கில் முக்கிய தீர்ப்பு

566பார்த்தது
பாலியல் பேரம் - நிர்மலா தேவி வழக்கில் முக்கிய தீர்ப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றியவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய நிலையில் 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி