செந்தில் பாலாஜி அமைச்சராவதில் சிக்கல் இல்லை - வழக்கறிஞர்

63பார்த்தது
செந்தில் பாலாஜி அமைச்சராவதில் சிக்கல் இல்லை - வழக்கறிஞர்
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறையில் இருந்தார். இந்த நிலையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பேசிய செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர், “விசாரணை கைதியாக இருப்பதால் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராவதில் எந்த சிக்கலும் இல்லை” என கூறினார்.

தொடர்புடைய செய்தி