அதிமுக நிர்வாகிகள் நாதகவுடன் கூட்டணி வைக்க இபிஎஸ்-ஐ வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு நாதக அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை பல சமயங்களில் எடுத்துள்ளது. கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு நாதக ஆதரவு தெரிவித்தது. தற்போது சாட்டை துரைமுருகன் கைதிற்கு எடப்பாடி பழனிச்சாமி தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார். இரு கட்சிகளும் நெருங்கி வருவதை இந்த சம்பவங்கள் உணர்த்துகின்றன.