சசிகலா ரீ எண்ட்ரி - எடப்பாடி கிண்டல்

50பார்த்தது
அதிமுகவை காப்பாற்றப் போவதாக சசிகலா கூறியதற்கு இத்தனை நாட்கள் அதிமுகவை காப்பாற்றியது யார்? என்று சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி, "அதிமுகவில் யாரும் ஜாதி பார்ப்பது இல்லை. ஏதாவது ஒரு குறை கூற வேண்டும் என்பதற்காக சசிகலா அதிமுகவை விமர்சிக்கிறார். ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. கட்சியை காப்பாற்றுவேன் என சசிகலா கூறுவது, 3 ஆண்டு வேலைக்கு செல்லாமல், திடீரென வேலைக்கு செல்வது போல் உள்ளது" என கிண்டல் அடித்துள்ளார்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி