மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் இன்று (ஜூன் 19) ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சன்ஸ்வாடி தொழிற்பேட்டை பகுதியில் ஒரு நிறுவனத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஐவர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 8 பைக்குகள், 2 கார்கள் பலத்த சேதமடைந்தன. எம்எல்ஏ அசோக் பவார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.