திமுக எம்பி-யை தடுத்த சிஆர்பிஎஃப் வீரர்- பறந்த புகார் கடிதம்

82பார்த்தது
திமுக எம்பி-யை தடுத்த சிஆர்பிஎஃப் வீரர்- பறந்த புகார் கடிதம்
நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து திமுக எம்பி அப்துல்லாவை சிஆர்பிஎஃப் வீரர் தடுத்து நிறுத்தினார். இது குறித்து மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் துணை தலைவருமான ஜக்தீப் தன்கருக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “மாநிலங்களவை உறுப்பினர்களின் கண்ணியத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பிரதிநிதியான தம்மை சிஆர்பிஎஃப் வீரர் கேள்வி எழுப்பியது வேதனை தருகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் தம்மை தடுத்த வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி