சேலத்தில் கனமழை: கந்தாஸ்ரமம் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு

4293பார்த்தது
சேலம் அயோத்தியாப்பட்டணம், காரிப்பட்டி, மேட்டுப்பட்டி, உடையாப்பட்டி, வலசையூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனிடையே நேற்று மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை அயோத்தியாப்பட்டணம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல் ஜருகுமலை பகுதியிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக, கந்தாஸ்ரமம் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி