சேலம் நெய்க்காரப்பட்டி திருமணிமுத்தாற்றில் மிதந்த ஆண் சடலம்

66பார்த்தது
சேலம் கொண்டலாம்பட்டி அருகே நேற்று முன்தினம்(அக்.22) ஒரு ஆண் சடலம் மிதந்து செல்வதை அறிந்த அப்பகுதியினர் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அந்த பகுதியில் தேடினர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. இரண்டாவது நாளாக இன்றும்(அக்.24) நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள திருமணிமுத்தாற்றில் போலீசாரும், தீணிப்புத்துறையினரும் இணைந்து தேடினர். அப்போது ஓடையின் முட்புதரில் சிக்கியபடி ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து உடலை கயிறு கட்டி வெளியே இழுத்து வந்தனர். சுமார் 40 வயதான ஆண் உடல் என்பது தெரியவந்தது. முகம் சிதைந்த நிலையில் இருந்ததால் அவரை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அவரை கொலை செய்து முகத்தை யாராவது சிதைத்து உடலை அங்கு வீசினார்களா, அல்லது மது போதையில் தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி