"7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்" - மத்திய அமைச்சர் அறிவிப்பு

51பார்த்தது
"7,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்" - மத்திய அமைச்சர் அறிவிப்பு
தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக, வெளி ஊர்களில் இருக்கும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இதற்காக ரயில் சேவையை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 7,000 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி