திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் அரசு வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்கள், பணி அனுபவத் திட்டத்திற்கு பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் முகாமிட்டுள்ளனர். ஏத்தாப்பூரில் நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில், பொதுமக்கள் தவறாமல் 100 தவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.