தமிழ் புத்தாண்டு;காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை

62பார்த்தது
தமிழ் புத்தாண்டு;காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் சிறப்பு பூஜை
சேலம் ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதன்படி அதிகாலை 5. 30 மணிக்கு கோமாத பூஜையுடன் நடை திறக்கப்பட்டு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. 6. 30 மணிக்கு காவடி பழனியாண்டவர், தக்‌ஷினா காளி அம்மனுக்கு தங்ககவசம் சாத்துப்படி, சித்திரைக்கனி பூஜையும், காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், மகா ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ஐஸ்வர்யலட்சுமி ஹோமம், குபேர லட்சுமி ஹோமம், தக்‌ஷின காளி மகா ஹோமம், ஸ்ரீ ருத்தர ஹோமம் நடைபெறுகிறது.
தொடர்ந்்து காலை 10 மணிக்கு பஞ்சாங்க பூஜை, குபேரர், குபேரலட்சுமி பூஜை, ஸ்ரீ ஐஸ்வர்யலட்சுமி பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள் அவர்களே கலச பூஜை செய்யலாம். முடிவில், அவர்களுக்கு லட்சுமி வெள்ளிக்காசு, தாம்பூலம் வழங்கப்படும். மதியம் 12 மணிக்கு கலசாபிஷேகமும், அதை தொடர்ந்து காவடி பழனியாண்டவருக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு தமிழ் புத்தாண்டையொட்டி தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி