சேலம்: இசைப்பள்ளியில் இசைக்கருவிகள் கண்காட்சி

75பார்த்தது
சேலம்: இசைப்பள்ளியில் இசைக்கருவிகள் கண்காட்சி
சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இசைக்கருவிகள் மற்றும் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி இன்று (செப். 19) காலை 10:00 மணிக்கு தொடங்கி வைத்து நேரில் பார்வையிட்டார். கண்காட்சியில் நாதஸ்வரம், மிருதங்கம், வயலின், தவில், பம்பை மேளம், கிட்டார் உள்ளிட்ட இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புகைப்படம், இசைக்கருவிகள் கண்காட்சி செப். 21 வரை தொடர்ந்து 3 நாட்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் பாரம்பரியமிக்க இசை வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்த சான்றுகள், சான்றோர்களின் புகைப்படங்கள், சிறப்பு வாய்ந்த இசைக் கலைஞர்களின் புகைப்படங்களும், கண்காட்சியின் முக்கிய அம்சமாக இசை இலக்கண, செயல்முறை சார்ந்த அம்சங்கள் ஆகியவைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி