ஓமலூர்: சாராய ஊறல் போட்ட லாரி டிரைவர் கைது

2233பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி அருகே உள்ள மானத்தாள் ஊராட்சி நாடார் காலனியைச் சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 40). லாரி டிரைவர். இவர் வீட்டில் சாராயம் காய்ச்ச 50 லிட்டர் ஊறல் போட்டுள்ளார். இதுகுறித்து தொளசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது சின்னத்தம்பி வீட்டின் குளியறையில் பேரலில் 50 லிட்டர் சாராயம் ஊறல் போட்டு வைத்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் சின்னதம்பியிடம் விசாரணை நடத்தினர். அதில் அடுத்த வாரம் நடைபெற உள்ள திருவிழாவிற்கு வரும் உறவினர்களுடன் சாராயம் குடிப்பதற்காக ஊறல் போட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சின்னதம்பியை கைது செய்தனர்.

மேலும் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். லாரி டிரைவர் வீட்டில் சாராய ஊறல் போட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி