பெரியார் பல்கலைக்கழக தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு!

57பார்த்தது
பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக 500 பக்க ஆவணங்கள் கொண்ட புகார் மனு!

பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், தமிழ்நாடு உயர் கல்வி செயலருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

விசாரணைக் குழுவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கொள்கை முடிவுகள் எடுப்பதை தடுத்தும், பணிக்காலத்தை நீட்டிக்க அனுமதி வழங்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இன்னும் 20 நாட்களில் பணி ஓய்வு பெறும் துணை வேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என பெரியார் பல்கலைக்கழக தொழிற்சங்கத்தினர் தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட துணைவேந்தர் ஜெகநாதன் மீது 500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

இந்த ஆவணங்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி