பானிபூரியில் கிடந்த துண்டு பீடி.. அதிர்ச்சி சம்பவம்!

74பார்த்தது
பானிபூரியில் கிடந்த துண்டு பீடி.. அதிர்ச்சி சம்பவம்!
வேலூர் மாவட்டம் பொன்னையில் வடமாநிலத்தவர் ஒருவர் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இங்கு நேற்று (ஆகஸ்ட் 31) மாலை பொன்னை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபர் பானிபூரி சாப்பிட சென்றார். அங்கு பானிபூரி சாப்பிட்டுக்கொண்டிருந்த வாலிபர், அதில் துண்டு பீடி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வியாபாரியிடம் தட்டிக்கேட்டார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத வடமாநில வியாபாரி, வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி