மாமியாரின் கள்ளக்காதலை தெரிந்துகொண்ட மருமகள் கொலை

52பார்த்தது
மாமியாரின் கள்ளக்காதலை தெரிந்துகொண்ட மருமகள் கொலை
நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் அருகே கடந்த ஜூன் மாதம் 24 ம் தேதி யாஷிகா பர்வீன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரின் பெற்றோர்கள் அளித்த புகாரின்பேரில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு முடிவுகள் கடந்த வாரம் வெளியாகின. அதில் உணவில் சயனைடு கலந்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மாமியார் யாஸ்மின், அவரது உறவினர் காளிப், கணவர் இம்ரான், இம்ரானின் தம்பி முக்தார் ஆகியோரை கைது செய்து விசாரித்ததில், யாஸ்மின் மற்றும் காளிப் ஆகியோரின் கள்ளத்தொடர்பு குறித்து யாஷிகாவுக்கு தெரிந்ததால் கொலை செய்ததாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி