சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு, சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் தேன்மொழி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். பேரூர் செயலாளர் காங்கமுத்து முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னசாமி வரவேற்றார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஸ்ரீதரன், செல்வராஜ், வெங்கடாசலம், பொதுமக்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முரளி நன்றி கூறினார்.