சேலம் மாவட்டம், கெங்கவல்லியிலிருந்து தம்மம்பட்டிக்கு நேற்று எம். சாண்ட் ஏற்றிச் சென்ற டாரஸ் லாரி கொண்டையம்பள்ளி பேருந்து நிறுத்தம் வளைவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தடுமாறி வளைவில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் மீது எம். சாண்ட் மணல் கொட்டியதில் செல்வி, தங்கள், தங்கம்மாள், கலா ஆகிய நான்கு பேர் மணலில் சிக்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஜேசிபி வாகனத்தைக் கொண்டு நான்கு பேரையும் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.