சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேட்டூயுடையார்பாளையம் புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் பொன்னுவேல் இவரது மனைவி வசந்தி கூலி தொழிலாளியான பொண்ணுவேலுவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கவின் (21) கூலி வேலை செய்து வருகிறார். இளைய மகன் நடனாலயா பயின்று வருகிறார்.
இந்நிலையில் வசந்தி அடிக்கடி போன் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொண்ணு வேல் மற்றும் அவரது மகன்கள் நேற்று இரவு வசந்தியிடம் கேட்டுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தாய் வசந்தியை இரு மகன்கள் மற்றும் தந்தை சேர்ந்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த வசந்தி மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வசந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் அடிப்படையில் ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பொண்ணுவேல் மற்றும் அவரது இரண்டு மகன்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.