ஆத்தூர் கோவில் பூட்டை உ டைத்து உண்டியல் திருடும் சிசிடிவி

82பார்த்தது
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட முல்லைவாடி 3வது வார்டு நாராயணபுரம் பகுதியில் பெருமாள் கோவில் உள்ளது,
இந்த பெருமாள் கோவிலில் கடந்த 19ந்தேதி மாலை வழக்கம் போல் கோவில் பூசாரி பூஜை முடித்துவிட்டு கோவிலில் பூட்டிச் சென்றார். மீண்டும் காலை பூஜை செய்ய வந்த பூசாரி கோவில் கேட் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அப்பகுதி மக்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நகரப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாரணை மேற்கொண்டதில் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போனது தெரிய வந்தது. மேலும் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது அதிகாலை 3 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கோவிலின் கேட்டை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று உண்டியலை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கோவிலின் உண்டியலை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி