கேரளா: திருவனந்தபுரம் அருகே உள்ள நகரூர் பகுதியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த வாலன்டைன் (22) என்பவர் 4ஆம் ஆண்டு பிடெக் படித்து வந்தார். இவருக்கும் அதே கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த லம்சங் ஸ்வாலா (22) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கல்லூரிக்கு அருகே இருவரும் மோதிகொண்ட நிலையில், வாலன்டைனுக்கு கத்திக் குத்து விழுந்தது. தொடர்ந்து போலீசார் லம்சங் ஸ்வாலாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.